படித்தவர்கள் தங்களை படிக்காதவர்களிடமிருந்து எப்படி வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்று எண்ணிய போது தொடங்கியதுதான் இந்த ஆங்கில அல்லது பிற மொழி பழக்கம்.
படித்தவர்கள் வேறு மொழியில் பேசும் போது புரியாததால் படிக்காதவர்கள் அவர்கள் எண்ணவோ விஞ்ஞானத்தையும், மருத்துவத்தையும், சமூக மாற்றத்திற்காகவும் பேசுவது போல் எண்ணுவார்கள். படத்திற்கு சென்றதையும், நோய்வாய்ப்பட்டு மருத்துவரை சந்திக்க நேர்ந்ததையும் வேறு மொழியில் எதையோ சாதித்ததை போல பேசுவார்கள். இன்றுவரை பெரும்பாலோனர் செய்து இதை தான். இரத்த கொதிப்பு உள்ளதையும், உணவு பொருள் சீரணிக்கவில்லை என்பதையும் பேசுவார்கள்.
ஆனால் படிக்காதவர்கள் இவர்களை அறிவாளிகள் என்றும், தவறாக பிற மொழியில் பேசினாலும் சரியாகதான் பேசுவார்கள் என்றும் எண்ண தொடங்கினர்.
தவறாக பேசினால் முறையாக படித்தவனுக்கு நன்கு தெரியும் ஆனால் சுட்டிக் காட்ட மாட்டான். ஆனால் படிக்காதவன் தவறென்றால் அந்த இடத்திலோ அல்லது வெளியிலோ சுட்டிக் காட்டும் திறன் கொண்டவன்.
அதன் விளைவு பிற மொழி பேசுபவனெல்லாம் அனைத்தும் தெரிந்தவன், உயர்ந்தவன் என்றும். படிக்காதவன் எல்லாம் இதற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் என்றும் சமூகத்தில் ஒரு பிம்பம் உள்ளது. இதை உடைக்காமல் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.
இவர்களின் மொழி பழக்கத்தை பார்த்து படிக்காதவர்களும் படித்தவர்கள் என்றால் ஆங்கிலத்திலோ அல்லது பிற மொழியிலோ பேசுபவர்கள் என்று எண்ணத் தொடங்கினார்கள்.
தாய்மொழியில் பேசுவதையே இழிவாக எண்ணியவர்கள், எண்ணுபவர்கள்
தாய்மொழியில் பேசுபவர்களை இழிவாக பார்பவர்கள் ஏராளம்…..
தாய்மொழியில், அதுவும் தமிழ் மொழியில் இல்லாத எதை பிறமொழியில் பேசுவீர்கள் என்று யாராவது ஒருவரால் ஆரோக்கியமான விவாதத்திற்கு முன் வர முடியுமா?
பருப்பு என்று கூறுவதற்கு கூச்சப்பட்டு dhall என்று கூறுவது.
கொண்டை கடலை என்று கூறுவதற்கு கூச்சப்பட்டு Chenna என்று கூறுவது.
இப்படி கூறுவதால் நமக்கொன்றும் பருப்போ, கொண்டை கடலையோ இல்லாமல் பிற உணவு பொருளை அவர்கள் தரப்போவதில்லை.
உலக மயமாக்கல் என்ற பெயரில் உள்ளூரில் உள்ளவர்கள் தங்கள் மொழியையும், தொழிற் நுட்பத்தையும் மேம்படுத்திக் கொண்டிருப்பார்கள். நாம் நம்மையே குறை சொல்லிக் கொண்டு செர்மன், சீன மொழி படித்தால் நன்று என்றும் நம் தாய் மொழியை அழிக்க தொடங்கி விடுவோம்.
ஒன்றை பயன்படுத்தாமல் இருப்பதும் ஒருவகையான அழிப்பே. பேசுவது, எழுதுவதை தவிர்த்தல் போன்றவைகளால்.
படித்தவன் என்பவன் தாய்மொழியை தாழ்த்தாமல் இருப்பவனே தவிர, தாய் மொழி எனக்கு தெரியாது என்று பெருமையாக கூறுவதில் இல்லை. இது வெட்க கேடு.
படிக்காதவனும் தெரிந்த தகவலை விட படித்தவனுக்கு மொழியை பற்றிய தகவல் அதிகம் தெரிந்து இருக்க வேண்டும் அதிக அக்கறையுடன். பிறர் பேசுகின்ற மொழியை பார்த்து உடனே தாய்மொழியை அதன் தனி தன்மை தெரியாமலே குறை கூறுவது சரியல்ல.
ஒரே தாய்மொழியை கொண்டவர்கள் கூட அந்த மொழியை பேச நம்மில் பலர் தயங்குகிறோம். அப்படி என்ன ஒரு இழுக்கு என்று தெரியவில்லை.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் கூறாதவற்றையா சான் கீட்சும், சேக்சுபியரும் கூறிவிட்டனர்.
ஐயா உள்ளே வரலாமா? (பள்ளியில் ஆசிரியர் முதல் மாணவர்கள் வரை சிரிக்கின்றனர் கூறியவரை பார்த்து)
May I come in sir? (எவரும் சிரிக்கவில்லை)
இங்கே தமிழில் பேசியவர் என்ன தவறாக கூறிவிட்டார்?
ஆனால் ஆங்கிலத்தில் கூறியவர் அப்படி என்ன உயர்த்தி அல்லது தாழ்மையுடன் கூறிவிட்டார்?
இதுதான் இன்றைய கல்வியின் நிலை.
எண் கணிதம் (Numerology) மூலம் நம்மின் பல பெயர்கள் மாற்றப்படுகின்றன. குறிப்பாக ’ச்ச்’ என்று சேர்ப்பது. இதையே தமிழில் உங்கள் பெயரை எழுதும் பொழுதும் மாற்றியமைத்தால் அப்பொழுது நம் பெயரின் மதிப்பு நமக்கு தெரியும். தவறாக பிற மொழியில் எழுதினால், பேசினால் ரசிப்பார்கள் ஆனால் அதையே தாய் மொழியில், தமிழ் மொழியில் செய்தால். நமக்கே தெரியும் அதன் விளைவு சமூகத்தில் என்னவாக இருக்கும் என்று.
ஆங்கிலமோ, பிற மொழியோ புரிந்து கொள்ள முடியும். ஆனால் உணர்ந்து கொள்ள முடியாது.
பெருமைக்காக ஆங்கில அல்லது பிற மொழி நூலைப் படிப்பதால் உள்ளம் வெள்ளையாகிவிட முடியாது.
ஆங்கிலமோ, பிற மொழியோ நம் தாய் மொழி தெரியாதவனுடன் உரையாடவே தவிர. நம் தாய்மொழியை தெரிந்தவரிடம் உரையாட அல்ல.
படித்தவன் என்பவன் தாய்மொழியை உயர்த்தி பிடிப்பவனே தவிர தாய்மொழியை பயன்படுத்தபவனை தாழ்த்துவதில் இல்லை..