Category Archives: செய்திகள்

சோழேஸ்வரர் கோயில் தூய்மைப்படுத்தும் பணி

இடம்: மன்னார்குடி
நாள்: 16 பிப்ரவரி 2020

மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் சார்பில் களப்பணியாக பட்டக்காரத்தெருவில் உள்ள சோழேஸ்வரர் கோயில் (சிவன் கோயில்) உள்ளே இருந்த தேவையில்லாத செடிகொடிகளை அகற்றியும், புயலின் பொழுது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தியும் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பணிகள் நிறைவு பெற்றது.

இத்துடன் கோயிலை சுற்றி சிறு சிறு மரக்கன்றுகளும் நட்டுவைத்து இவ்வார கலந்தாய்வையும் மன்னையின் மைந்தர்கள் அங்கே ஒருங்கிணைத்தார்கள். அதில் தற்சார்பு பொருளாதாரம் பற்றிய விவாதம் கருப்பொருளாக கொண்டு பலரும் தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தார்கள்.

களப்பணியில் கலந்து கொண்டவர்கள்:
நிரஞ்சன், வசந்தன், பாலாஜி, யோகேஷ்வரன், ஜெயபிரகாஷ், ரஞ்சித், ராம்,
அருண்பதி, ராசசேகர், ஓம், ராசசபரி, கார்த்தி, நந்தகுமார், ஜவகர், G.T. மகேஷ், அஷ்வத், மணிகண்டன், 3 சிறுவர்கள், மற்றும் தெருவாசிகள்

ஊடகத்தில் இடம்பெற்ற நம் மன்னை 154வது ஆண்டு விழா

மன்னையின் மைந்தர்கள் அணியினரால் இந்த ஆண்டு, முதல் முதலாக மன்னார்குடி 154 ஆண்டு நிறைவையொட்டி 29-11-2019 அன்று புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. அதைப்பற்றிய செய்தியை இந்து தமிழ் திசை, தினமலர், தினமணி நாளேடு 01-12-2019 அன்று வெளியிட்டு மேலும் மக்களிடம் கொண்டு சேர்த்தது.

அதன் படங்கள் தங்கள் பார்வைக்கு…

செய்திகளை இடம்பெற செய்த ஊடகவியலாளர்களுக்கு எங்களின் நன்றிகள்!!

மன்னையின் மைந்தர்கள் குழுவின் இவ்வார களப்பணி (19-03-2017)

யார் யார் வருகிறார்கள் என்பது அவசியமில்லை, ஆனால் களப்பணி தொடர்ந்து நடக்க வேண்டும் என்ற ஒரு நோக்கில் பயணிக்கும் நம் குழுவின் இவ்வார களப்பணி மன்னார்குடியில் உள்ள நம்மாழ்வார் ஏரியில் வளர்ந்து இருந்த சீமை கருவேல மரசெடிகளை அகற்றும் பணி நம் மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்களின் உதவியுடன் அகற்றப்பட்டது.

களப்பணியில் கலந்துகொண்டவர்கள் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டு உள்ளது….

செந்தில்பக்கிரி சாமி
ராம்
செந்தில் குமரன்
வினோத்
ரஞ்சித்
ரமேசு
ஜவகர்

களப்பணியில் பங்கு கொண்டே அனைத்து தோழர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ ….

நம்மாழ்வார் ஏரியின் கரைகளில் பரவியுள்ள பார்த்தீனியம் செடிகளையும், சீமைகருவேல செடிகளை அகற்றும் பணி

ஞாயிற்றுக்கிழமை (12-03-2017) அன்று விடுமுறை நாள் என்றும் பாராமல் நமது மன்னையின் மைந்தர்கள் அமைப்பால் தூர்வாரி சீரமைக்கபட்ட நம்மாழ்வார் ஏரியின் கரைகளில் பரவியுள்ள  பார்த்தீனியம் செடிகளையும், சீமைகருவேல செடிகளை அகற்றும் பணியில் நமது அமைப்பின் தோழர்கள் ஈடுபட்டனர்.

மேலும் கரையில் வைத்துள்ள மரச் செடிகளுக்குக் சொட்டு நீர் முறையில் தண்ணீர் ஊற்ற தண்ணீர் பொத்தல்களை அரை அடி ஆழத்தில் வேர் அருகே பதிக்கும் பணியையும் செய்தனர், இனி தொடர்ந்து மன்னார்குடியில் உள்ள அனைவரும் காலை மாலை யில் நடைபயிற்சி மேற்கொள்ள நம்மாழ்வார் ஏரி கரையை பயன்படுத்துவது என்றும் முடிவெடுத்துள்ளோம்.

களப்பணியில் ஈடுபட்ட தோழர்களுக்கு மதிய உணவை கார்த்தி (Lakshmi Furniture) உபயமாக வழங்கி சிறப்பித்தார்.

களப்பணியில் ஈடுபட்ட தோழர்கள் அஜித், பாலாஜி, ராம், ரஞ்சித், வினோத், செந்தில்குமரன், ஆகாஷ், ராஜகுரு, ராஜேஷ், ராஜகோபால், கார்த்தி, ஜவகர், விக்னேசு, தமிழ்மணி மற்றும் ஓம் அவர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்.

களப்பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு இதோ ….

மன்னார்குடியில் நடந்த ஏறுதழுவல் மீட்பு பேரணி

நான்காவது தூணான பெரும்பாலாக முன்னணி ஊடகங்கள் ஊனமான நிலையில் உள்ளதால், சமூக ஊடகங்கள் நான்காவது தூணாக உருவெடுத்தது மகிழ்ச்சியாகவே உள்ளது.

அந்த சமூக ஊடகத்தின் வழியாக பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒடுக்குபவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பது தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று (11-01-2017) மாலை 4.00 மணி அளவில் மன்னார்குடி தேரடி திடலில் இருந்து நகராட்சி வரை தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், நாட்டு மாடு வளர்ப்பு, இயற்கை விவசாயம், ஏறுதழுவல் இவை அனைத்தையும் மீட்டெடுக்கும் வகையில் மண்ணை காக்கும் மன்னார்குடி வட்டார நண்பர்களால் ஒன்றிணைக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் நம் அமைப்பினர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் பேரணிக்கு வருகை தந்த அனைத்து பொது மக்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

நம்மாழ்வார் ஏரியை திரு.வெள்ளையன் அவர்கள் பார்வையிட்டார்

இந்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனையை கண்டித்து ஐயா தா. வெள்ளையன் தலைமையில் மன்னை வணிகர் நல சங்கம் சார்பில் ஏற்பாடு செய்த போராட்டத்திற்கு வந்தவர் மன்னையின் மைந்தர்கள் மீட்டெடுத்த நம்மாழ்வார் ஏரியை 10-01-2017 அன்று நேரில் வந்து பார்வையிட்டார்.

அதன் புகைப்படம் இதோ ….

காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஐயா மணியரசன் நம்மாழ்வார் ஏரியை பார்வையிட்டார்

மன்னையின் மைந்தர்கள் குழு மீட்டெடுத்த நம்மாழ்வார் ஏரியை இன்று (08-01-2017) காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஐயா மணியரசன் பார்வையிட்டார்… உடன் நமது குழுவின் தலைமை ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன், குழு உறுப்பினர்கள் ஜீவா மற்றும் விக்னேஷ் அவர்களும் வருகை தந்தனர்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ ….

நம்மாழ்வார் நினைவேந்தல் – 2016

இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

31-12-2016 அன்று மன்னையின் மைந்தர்களால் சார்பாக மன்னார்குடி நகராட்சி எதிர்புறம்  மாலை 4.00 மணிக்கு  நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மீத்தேன் திட்டத்தை எதிர்ப்போம்!
இயற்கை வேளாண்மையை காப்போம்!
ஐயா நம்மாழ்வார் வழி நடப்போம்! என்ற உறுதியேற்புடன்…

மருத்துவரும், நம் குழுவின் ஆலோசகருமான பாரதிச்செல்வன் ஐயா அவர்கள் வருகை தந்து மேலும் சிறப்படைய செய்தார் நிகழ்ச்சியை.

nammazhvaar-anniversary-invitation

அதனை அடுத்து கருத்தரங்கம் மன்னார்குடியில் உள்ள நகர அரங்கில் (City Hall) மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது.

மன்னையின் மைந்தர்கள் அமைப்பினருக்கு நம்மாழ்வார் நூல் கொடுத்து கௌரவிக்கபட்டது.

கருத்தரங்க ஏற்பாடுகளை செய்த காவிரி உரிமை மீட்பு குழுவிற்கு இந்த தருணத்தில் எங்கள் மன்னையின் மைந்தர்கள் குழுவின் சார்பாக நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

அதன் புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு இதோ ….

மிதிவண்டி பயணம் – நீர்நிலைகளை பாதுகாக்க கோரி

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க கோரி மிதிவண்டி பயணம் – 2016 (தண்ணீருக்கான பொது மேடை) குழு சென்னை, கோவை, கன்னியாகுமரி போன்ற பெரு பெருநகரங்கள் வழியாக பல ஊர்களுக்கு மிதிவண்டி பயணம் மேற்கொண்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

மிதிவண்டி பயண குழுவில் பாரதி கண்ணன், இரஞ்சித் மற்றும் விக்னேஷ் மூவரும் இந்த தொடர் பயணத்தில் உள்ளார்கள். அவர்கள் 108வது நாளான நேற்று (09-12-2016) மாலை தஞ்சாவூர் வழியாக மன்னார்குடியில் மன்னையின் மைந்தர்கள் மேன்படுத்தி வரும் நம்மாழ்வார் ஏரியை வந்து அடைந்தனர்.

நம் குழு உறுப்பினர் அருண் ரவி அவர்களின் மூலம் அறிந்து கொண்டு, நம்மாழ்வார் ஏரியை வந்து பார்வையிட்டனர்.

அவர்களுடன் நம் குழு உறுப்பினர்களும் அவர்களின் பயணம் பற்றியும், நீர்நிலைகளை பாதுகாக்க மன்னார்குடியில் மன்னையின் மைந்தர்கள் செய்து வரும் திட்டங்கள் பற்றியும் விவாதித்தார்கள்.

இவர்களின் பயணத்தை பற்றி மேலும் தகவல் பெற தோழர் பாரதி கண்ணன் அவர்களின் இந்த  https://www.facebook.com/crbharathikannan முகநூல் முகவரியில் பின்தொடருங்கள்.

அதன் புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு கீழே பதிந்துள்ளோம் ….

நிலத்தடி நீர் அதிகரிக்க வேண்டி செய்த பணி – நம்மாழ்வார் ஏரி

ஒவ்வொரு பணியாக முடித்து, பல கருத்துக்கள், அறிவுரைகளை கருத்தில் கொண்டு மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியில் நிலத்தடி நீரின் மட்டத்தை அதிகரிக்கும் வண்ணம் களப்பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு முடித்துள்ளார்கள்.

நிதியுதவி வழங்கிய மற்றும் களப்பணியாளர்கள் அனைவருக்கும் மன்னையின் மைந்தர்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்.

நம் களப்பணியாளர்கள் செயலை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இதோ …..

மேலும் இசையமைப்பாளர் வசந்த் அவர்கள் தன் பிள்ளையின் பிறந்த நாளையொட்டி அங்கு மரக்கன்றுகளை நட்டுவைத்ததும் இல்லாமல் அதற்கான கூண்டையும் அமைத்து கொடுத்தார்.