Tag Archives: களப்பணி

சோழேஸ்வரர் கோயில் தூய்மைப்படுத்தும் பணி

இடம்: மன்னார்குடி
நாள்: 16 பிப்ரவரி 2020

மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் சார்பில் களப்பணியாக பட்டக்காரத்தெருவில் உள்ள சோழேஸ்வரர் கோயில் (சிவன் கோயில்) உள்ளே இருந்த தேவையில்லாத செடிகொடிகளை அகற்றியும், புயலின் பொழுது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தியும் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பணிகள் நிறைவு பெற்றது.

இத்துடன் கோயிலை சுற்றி சிறு சிறு மரக்கன்றுகளும் நட்டுவைத்து இவ்வார கலந்தாய்வையும் மன்னையின் மைந்தர்கள் அங்கே ஒருங்கிணைத்தார்கள். அதில் தற்சார்பு பொருளாதாரம் பற்றிய விவாதம் கருப்பொருளாக கொண்டு பலரும் தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தார்கள்.

களப்பணியில் கலந்து கொண்டவர்கள்:
நிரஞ்சன், வசந்தன், பாலாஜி, யோகேஷ்வரன், ஜெயபிரகாஷ், ரஞ்சித், ராம்,
அருண்பதி, ராசசேகர், ஓம், ராசசபரி, கார்த்தி, நந்தகுமார், ஜவகர், G.T. மகேஷ், அஷ்வத், மணிகண்டன், 3 சிறுவர்கள், மற்றும் தெருவாசிகள்

மன்னையின் மைந்தர்கள் குழுவின் இவ்வார களப்பணி (19-03-2017)

யார் யார் வருகிறார்கள் என்பது அவசியமில்லை, ஆனால் களப்பணி தொடர்ந்து நடக்க வேண்டும் என்ற ஒரு நோக்கில் பயணிக்கும் நம் குழுவின் இவ்வார களப்பணி மன்னார்குடியில் உள்ள நம்மாழ்வார் ஏரியில் வளர்ந்து இருந்த சீமை கருவேல மரசெடிகளை அகற்றும் பணி நம் மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்களின் உதவியுடன் அகற்றப்பட்டது.

களப்பணியில் கலந்துகொண்டவர்கள் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டு உள்ளது….

செந்தில்பக்கிரி சாமி
ராம்
செந்தில் குமரன்
வினோத்
ரஞ்சித்
ரமேசு
ஜவகர்

களப்பணியில் பங்கு கொண்டே அனைத்து தோழர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ ….