விடுமுறை, ஞாயிறு என வந்துவிட்டால் படிக்கும் மாணவர்கள் என்றால் விளையாட்டு, அலுவலகங்களில் வேலை புரிபவர்கள் என்றால் ஓய்வு அல்லது தொலைக்காட்சி என இருக்கும் சமூகத்தில் மன்னையின் மைந்தர்கள் சமூக அக்கறையுடன் கிடைக்கும் நேரங்கள் அனைத்தையும் செவ்வனே எப்படி பயன்படுத்துவது என்று திட்டமிட்டு இந்த வார இறுதியில் செய்த பணிதான் மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியின் (சீயார் தோப்பு) பகுதியில் இருக்கும் நீர்த்தேக்க தொட்டி பழைய சுவர்கள், மற்றும் அதில் இருக்கும் பாழடைந்த அறையின் சுவர்களில் வெள்ளையடித்து தூய்மையாக்கிய செயல்.
காலை 7 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2.30 மணி வரை களப்பணியாற்றி அங்கு சுற்றியுள்ள மக்கள் பலர் சிந்திக்கும் வண்ணம் செய்து முடித்தனர்.
களப்பணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம். பின்வரும் தோழர்கள் களப்பணியை சிறப்பாக செய்து முடித்தவர்கள்.
குரு, தங்க கலைவாணன், கமல், விக்னேஷ், ஆகாஷ், பிரசன்னா, வினோத், புஸ்பராஜ், பிரவீன், சாய் விஜய், செந்தில் குமரன், செந்தில் பக்கிரி, இலியாஸ், ஜீவானந்தம், கைலாசம் ஐயா, மருத்துவர் பாரதிசெல்வன் ஐயா, தமிழ்மணி அண்ணாவின் அப்பா, ஆகாஷ் அம்மா அப்பா, மோகன், லட்சுமி.
அதன் புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு.























































































