Tag Archives: நீர்த்தேக்கம்

மிதிவண்டி பயணம் – நீர்நிலைகளை பாதுகாக்க கோரி

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க கோரி மிதிவண்டி பயணம் – 2016 (தண்ணீருக்கான பொது மேடை) குழு சென்னை, கோவை, கன்னியாகுமரி போன்ற பெரு பெருநகரங்கள் வழியாக பல ஊர்களுக்கு மிதிவண்டி பயணம் மேற்கொண்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

மிதிவண்டி பயண குழுவில் பாரதி கண்ணன், இரஞ்சித் மற்றும் விக்னேஷ் மூவரும் இந்த தொடர் பயணத்தில் உள்ளார்கள். அவர்கள் 108வது நாளான நேற்று (09-12-2016) மாலை தஞ்சாவூர் வழியாக மன்னார்குடியில் மன்னையின் மைந்தர்கள் மேன்படுத்தி வரும் நம்மாழ்வார் ஏரியை வந்து அடைந்தனர்.

நம் குழு உறுப்பினர் அருண் ரவி அவர்களின் மூலம் அறிந்து கொண்டு, நம்மாழ்வார் ஏரியை வந்து பார்வையிட்டனர்.

அவர்களுடன் நம் குழு உறுப்பினர்களும் அவர்களின் பயணம் பற்றியும், நீர்நிலைகளை பாதுகாக்க மன்னார்குடியில் மன்னையின் மைந்தர்கள் செய்து வரும் திட்டங்கள் பற்றியும் விவாதித்தார்கள்.

இவர்களின் பயணத்தை பற்றி மேலும் தகவல் பெற தோழர் பாரதி கண்ணன் அவர்களின் இந்த  https://www.facebook.com/crbharathikannan முகநூல் முகவரியில் பின்தொடருங்கள்.

அதன் புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு கீழே பதிந்துள்ளோம் ….

நம்மாழ்வார் ஏரி – பழைய சுவர்களில் வெள்ளையடிக்கும் பணி

விடுமுறை, ஞாயிறு என வந்துவிட்டால் படிக்கும் மாணவர்கள் என்றால் விளையாட்டு, அலுவலகங்களில் வேலை புரிபவர்கள் என்றால் ஓய்வு அல்லது தொலைக்காட்சி என இருக்கும் சமூகத்தில் மன்னையின் மைந்தர்கள் சமூக அக்கறையுடன் கிடைக்கும் நேரங்கள் அனைத்தையும் செவ்வனே எப்படி பயன்படுத்துவது என்று திட்டமிட்டு இந்த வார இறுதியில் செய்த பணிதான் மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியின் (சீயார் தோப்பு) பகுதியில் இருக்கும் நீர்த்தேக்க தொட்டி பழைய சுவர்கள், மற்றும் அதில் இருக்கும் பாழடைந்த அறையின் சுவர்களில் வெள்ளையடித்து தூய்மையாக்கிய செயல்.

காலை 7 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2.30 மணி வரை களப்பணியாற்றி அங்கு சுற்றியுள்ள மக்கள் பலர் சிந்திக்கும் வண்ணம் செய்து முடித்தனர்.

களப்பணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம். பின்வரும் தோழர்கள் களப்பணியை சிறப்பாக செய்து முடித்தவர்கள்.

குரு, தங்க கலைவாணன், கமல், விக்னேஷ், ஆகாஷ், பிரசன்னா, வினோத், புஸ்பராஜ், பிரவீன், சாய் விஜய், செந்தில் குமரன், செந்தில் பக்கிரி, இலியாஸ், ஜீவானந்தம், கைலாசம் ஐயா, மருத்துவர் பாரதிசெல்வன் ஐயா, தமிழ்மணி அண்ணாவின் அப்பா, ஆகாஷ் அம்மா அப்பா, மோகன், லட்சுமி.

அதன் புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு.

நிலத்தடி நீர் அதிகரிக்க வேண்டி செய்த பணி – நம்மாழ்வார் ஏரி

ஒவ்வொரு பணியாக முடித்து, பல கருத்துக்கள், அறிவுரைகளை கருத்தில் கொண்டு மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியில் நிலத்தடி நீரின் மட்டத்தை அதிகரிக்கும் வண்ணம் களப்பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு முடித்துள்ளார்கள்.

நிதியுதவி வழங்கிய மற்றும் களப்பணியாளர்கள் அனைவருக்கும் மன்னையின் மைந்தர்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்.

நம் களப்பணியாளர்கள் செயலை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இதோ …..

மேலும் இசையமைப்பாளர் வசந்த் அவர்கள் தன் பிள்ளையின் பிறந்த நாளையொட்டி அங்கு மரக்கன்றுகளை நட்டுவைத்ததும் இல்லாமல் அதற்கான கூண்டையும் அமைத்து கொடுத்தார்.

நம்மாழ்வார் ஏரி குழாய் பதிக்கும் பணி

ஐந்தாம் கட்ட பணியாக திட்டமிட்டு திரட்டிய நிதியை கொண்டு கடந்த வாரத்தில் குழாய் பதிக்கும் பணி ஆரம்பித்தாலும், இடையிடையே மழையின் குறுக்கீடும் இருந்தது, ஆனாலும் இடைவிடாது இரவு பகல் என பாராமல் களப்பணியாளர்கள் நம்மாழ்வார் ஏரியில் குழாய் பதிக்கும் பணியை வெற்றிகரமாக செய்து காட்டினர்.

இதன் மூலம் அருகில் உள்ள சியான் குளத்திற்கு, நம்மாழ்வார் ஏரிக்கும்  இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. நிதி உதவி வழங்கிய உறுப்பினர்கள் மற்றும் வெளியில் இருந்து உதவி நல்லுள்ளங்கள், களப்பணியாளர்களுக்கு மன்னையின் மைந்தர்கள் குழுவின் சார்பில் நன்றி உரித்தாக்குகிறோம்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு கீழே பார்வைக்கவும்.

நம்மாழ்வார் ஏரி பணியின் காணொளி

நமது மன்னையின் மைந்தர்கள் அமைப்பால் கட்டமைக்கப்படுகின்ற நம்மாழ்வார் ஏரியின் (சீயார் தோப்பு நீர்த்தேக்கம்) தொடக்கம் முதல் இன்று வரை  செயற்பாடுகளும் நமது அமைப்பின் நோக்கமும் எதிர்கால முன்னெடுப்புகளின் காணொளி தொகுப்பு.

களப்பணி, நிதி உதவி, கருத்து பங்களிப்பு என அனைத்திலும் துணை நின்ற மன்னையின் மைந்தர்கள் உறுப்பினர்கள், வெளியில் இருந்து சிறப்பு நிதியில் பங்கு கொண்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

காணொளி எடுத்து, மற்றும் பலரை சென்று அடையும் வகையில் ஒளிபரப்பிய ஜனனி தொலைக்காட்சி (மன்னார்குடி) நிர்வாகத்திற்கு மிக்க நன்றி.