Monthly Archives: January 2017

மன்னார்குடியில் நடந்த ஏறுதழுவல் மீட்பு பேரணி

நான்காவது தூணான பெரும்பாலாக முன்னணி ஊடகங்கள் ஊனமான நிலையில் உள்ளதால், சமூக ஊடகங்கள் நான்காவது தூணாக உருவெடுத்தது மகிழ்ச்சியாகவே உள்ளது.

அந்த சமூக ஊடகத்தின் வழியாக பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒடுக்குபவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பது தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று (11-01-2017) மாலை 4.00 மணி அளவில் மன்னார்குடி தேரடி திடலில் இருந்து நகராட்சி வரை தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், நாட்டு மாடு வளர்ப்பு, இயற்கை விவசாயம், ஏறுதழுவல் இவை அனைத்தையும் மீட்டெடுக்கும் வகையில் மண்ணை காக்கும் மன்னார்குடி வட்டார நண்பர்களால் ஒன்றிணைக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் நம் அமைப்பினர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் பேரணிக்கு வருகை தந்த அனைத்து பொது மக்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

நம்மாழ்வார் ஏரியை திரு.வெள்ளையன் அவர்கள் பார்வையிட்டார்

இந்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனையை கண்டித்து ஐயா தா. வெள்ளையன் தலைமையில் மன்னை வணிகர் நல சங்கம் சார்பில் ஏற்பாடு செய்த போராட்டத்திற்கு வந்தவர் மன்னையின் மைந்தர்கள் மீட்டெடுத்த நம்மாழ்வார் ஏரியை 10-01-2017 அன்று நேரில் வந்து பார்வையிட்டார்.

அதன் புகைப்படம் இதோ ….

காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஐயா மணியரசன் நம்மாழ்வார் ஏரியை பார்வையிட்டார்

மன்னையின் மைந்தர்கள் குழு மீட்டெடுத்த நம்மாழ்வார் ஏரியை இன்று (08-01-2017) காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஐயா மணியரசன் பார்வையிட்டார்… உடன் நமது குழுவின் தலைமை ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன், குழு உறுப்பினர்கள் ஜீவா மற்றும் விக்னேஷ் அவர்களும் வருகை தந்தனர்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ ….

நம்மாழ்வார் நினைவேந்தல் – 2016

இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

31-12-2016 அன்று மன்னையின் மைந்தர்களால் சார்பாக மன்னார்குடி நகராட்சி எதிர்புறம்  மாலை 4.00 மணிக்கு  நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மீத்தேன் திட்டத்தை எதிர்ப்போம்!
இயற்கை வேளாண்மையை காப்போம்!
ஐயா நம்மாழ்வார் வழி நடப்போம்! என்ற உறுதியேற்புடன்…

மருத்துவரும், நம் குழுவின் ஆலோசகருமான பாரதிச்செல்வன் ஐயா அவர்கள் வருகை தந்து மேலும் சிறப்படைய செய்தார் நிகழ்ச்சியை.

nammazhvaar-anniversary-invitation

அதனை அடுத்து கருத்தரங்கம் மன்னார்குடியில் உள்ள நகர அரங்கில் (City Hall) மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது.

மன்னையின் மைந்தர்கள் அமைப்பினருக்கு நம்மாழ்வார் நூல் கொடுத்து கௌரவிக்கபட்டது.

கருத்தரங்க ஏற்பாடுகளை செய்த காவிரி உரிமை மீட்பு குழுவிற்கு இந்த தருணத்தில் எங்கள் மன்னையின் மைந்தர்கள் குழுவின் சார்பாக நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

அதன் புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு இதோ ….