Monthly Archives: August 2021

ஐயா கோ.நம்மாழ்வார் நினைவு பூங்கா புனரமைப்பு

இன்று (01/08/2021) திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொடர்வண்டி நிலையம் வாசலில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா கோ.நம்மாழ்வார் நினைவு பூங்கா புனரமைப்பு பணியில் நம் அமைப்பு தோழர்கள் கலந்துக்கொண்டு களப்பணி ஆற்றினார்கள்.

இன்றைய களப்பணியில்…

• செண்பக மரக்கன்று (மன்னையின் பூலோக அடையாள விருட்சம்)
• பப்பாளி கன்று
• கருவேப்பிலை கன்று
• ஆடாதொடா
• வெள்ளெருக்கு
• அந்தி மந்தாரை
• லுனா

உள்ளிட்ட தாவரங்கள் நடப்பட்டன மற்றும் நாட்டு விதைகள் விதைக்கப்பட்டன.

கொரோனா பேரிடர் காலம் என்பதால் தொடர்ந்து களப்பணி செய்ய இயலாமல் இருந்த நிலையில் இந்த பணியை செய்தது மன்னையின் மைந்தர்கள் அமைப்பினருக்கு மேலும் பல புதிய களப்பணிகளை செய்ய புத்துணர்ச்சி கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். களப்பணியில் பொழுது எடுக்கப்பட்ட படங்களை இங்கு பகிர்ந்துள்ளோம்.

மன்னையின் மைந்தர்கள்
மண்ணின் மாற்றத்தை நோக்கி…
மன்னார்குடி
தொடர்புக்கு – 8220567322