Monthly Archives: March 2017

மன்னையின் மைந்தர்கள் குழுவின் இவ்வார களப்பணி (19-03-2017)

யார் யார் வருகிறார்கள் என்பது அவசியமில்லை, ஆனால் களப்பணி தொடர்ந்து நடக்க வேண்டும் என்ற ஒரு நோக்கில் பயணிக்கும் நம் குழுவின் இவ்வார களப்பணி மன்னார்குடியில் உள்ள நம்மாழ்வார் ஏரியில் வளர்ந்து இருந்த சீமை கருவேல மரசெடிகளை அகற்றும் பணி நம் மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்களின் உதவியுடன் அகற்றப்பட்டது.

களப்பணியில் கலந்துகொண்டவர்கள் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டு உள்ளது….

செந்தில்பக்கிரி சாமி
ராம்
செந்தில் குமரன்
வினோத்
ரஞ்சித்
ரமேசு
ஜவகர்

களப்பணியில் பங்கு கொண்டே அனைத்து தோழர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ ….

நம்மாழ்வார் ஏரியின் கரைகளில் பரவியுள்ள பார்த்தீனியம் செடிகளையும், சீமைகருவேல செடிகளை அகற்றும் பணி

ஞாயிற்றுக்கிழமை (12-03-2017) அன்று விடுமுறை நாள் என்றும் பாராமல் நமது மன்னையின் மைந்தர்கள் அமைப்பால் தூர்வாரி சீரமைக்கபட்ட நம்மாழ்வார் ஏரியின் கரைகளில் பரவியுள்ள  பார்த்தீனியம் செடிகளையும், சீமைகருவேல செடிகளை அகற்றும் பணியில் நமது அமைப்பின் தோழர்கள் ஈடுபட்டனர்.

மேலும் கரையில் வைத்துள்ள மரச் செடிகளுக்குக் சொட்டு நீர் முறையில் தண்ணீர் ஊற்ற தண்ணீர் பொத்தல்களை அரை அடி ஆழத்தில் வேர் அருகே பதிக்கும் பணியையும் செய்தனர், இனி தொடர்ந்து மன்னார்குடியில் உள்ள அனைவரும் காலை மாலை யில் நடைபயிற்சி மேற்கொள்ள நம்மாழ்வார் ஏரி கரையை பயன்படுத்துவது என்றும் முடிவெடுத்துள்ளோம்.

களப்பணியில் ஈடுபட்ட தோழர்களுக்கு மதிய உணவை கார்த்தி (Lakshmi Furniture) உபயமாக வழங்கி சிறப்பித்தார்.

களப்பணியில் ஈடுபட்ட தோழர்கள் அஜித், பாலாஜி, ராம், ரஞ்சித், வினோத், செந்தில்குமரன், ஆகாஷ், ராஜகுரு, ராஜேஷ், ராஜகோபால், கார்த்தி, ஜவகர், விக்னேசு, தமிழ்மணி மற்றும் ஓம் அவர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்.

களப்பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு இதோ ….