Category Archives: நிகழ்ச்சிகள்

மன்னார்குடி நகராட்சியின் 154வது ஆண்டு விழா

photo-expo-07கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மன்னார்குடியின் பழைய புகைப்படங்கள் மற்றும் தகவல்களை திரட்ட துவங்கிய மன்னையின் மைந்தர்கள் அணியினரால் இந்த ஆண்டு, முதல் முதலாக மன்னார்குடி 154 ஆண்டு நிறைவையொட்டி 29-11-2019 அன்று புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.

அதுவும் நம் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியின் ஒத்துழைப்புடன் அவர்களின் அரங்கத்திலேயே நடைபெற்றது.  மன்னார்குடியின் பழமையையும் பாரம்பரியத்தையும் விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மன்னார்குடியில் பழமையான தோற்றம், கோயில்கள், விடுதலைபோராட்ட வீரர்கள், கலைச் சின்னங்கள்,  அரசியல்வாதிகள் என அரிய புகைப்படங்களின் தொகுப்பாக வைக்கப்பட்டிருந்த இந்த கண்காட்சியினை மருத்துவர் இலரா.பாரதி செல்வன் அவர்கள் துவக்கி வைத்தார்.

கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட மன்னார்குடி தொடர்பான தகவல்கள் புகைப்படங்களாக இடம்பெற்றிருந்தன. பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கண்காட்சியினை கண்டு வியப்படைந்தனர். தொடர்ந்து மன்னார்குடி 154 எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் தலைவர் சி.ராம் தலைமை வகித்தார். சி. நிரஞ்சன் வரவேற்று பேசினார்.

மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் எஸ். அன்பரசு, 1866 ஆம் ஆண்டு முதல் 154 ஆண்டுகளாக மன்னார்குடி நகராட்சியின் செயல்பாடுகள், பதவி வகித்த நகரமன்ற தலைவர்கள், ஆணையர்கள் மற்றும் நகரத்தின் அமைப்பு குறித்து பேசினார். தமிழ்  இந்து நாளிதழின் நிருபரும் எழுத்தாளருமான எஸ். கோபாலகிருஷ்ணன், மன்னார்குடியின் விடுதலைப் போராட்ட வீரர் காக்காஜி ராமசாமி, உயர்நீதிமன்ற முதல் தமிழ் நீதிபதி முத்துசாமி ஐயர், விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று தொடர்ந்து அமைந்த மத்திய அரசின் ரயில்வே துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்த கும்மட்டி திடல் சந்தானம் ஐயங்கார் கலைத்துறையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களோடு இணைந்து பல நாடகங்களில் நடித்த எம்.ஜி. நடராஜ பிள்ளை ஆகிய மண்ணையும் மைந்தர்களை பற்றி விளக்கிப் பேசினார்.

பூண்டி கல்லூரியின் ஓய்வு பெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியர் டாக்டர் பூரணச்சந்திரன் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள மன்னார்குடி நகரத்தின் வரலாற்று நகரமைப்பு, உப்பு சத்தியாகிரகத்தில் மன்னார்குடி மனிதர்களின் பங்களிப்பு, தமிழக முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், அண்ணா ஆகியோருக்கு நெருக்கமாக இருந்த மன்னை நகர அரசியல் பிரமுகர்கள், கதராடை இயக்கத்தில் மன்னார்குடியின் பங்கு ஆகியவைப் பற்றி விளக்கிப் பேசினார்.

நிறைவாக ஜி.டி. மகேஷ் நன்றி கூறினார். சதீஷ்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கருத்தரங்கத்தையும் புகைப்பட கண்காட்சியும் மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் பொறுப்பாளர்கள் ஆர். ராஜசேகர், செந்தில். பக்கிரிசாமி, ஜி. விஜயவர்மன், சி.ரஞ்சித், ஓம். பிரகாஷ், மணிகண்டன், ராஜேஷ் மற்றும் வசந்தன் ஆகியோர் சிறப்பாக கையாண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் சிறுதானிய கஞ்சி மற்றும் புட்டு நமது உழவன் அங்காடி சார்பாக வழங்கப்பட்டது.

மழையையும் பொருட்படுத்தாமல் புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்திற்கு வந்து விழாவை சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒளிப்பட தொகுப்பை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.

திறவுகோல் முதல் மற்றும் ஆடி மாத மின்னிதழ் வெளியீடு

திறவுகோல் ஆடி மாத மின்னிதழை தவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

இடம்: PRM பூங்கா, தெப்பக்குளம் தென்கரை, மன்னார்குடி
நாள்: ஆணி 32, 2048 (16 யூலை, 2017)
நேரம்: மாலை 5 மணி

திறவுகோல் மின்னிதழை வெளியிடுவதில், மன்னையின் மைந்தர்கள் குழு மகிழ்ச்சியாக உள்ளோம். ஒவ்வொரு முறையும் புதியவற்றை முயற்சிப்பதில் தயங்கியது இல்லை. அதுவும் 2015ல் துவங்கிய எங்கள் பயணம் இன்று வரை பல செயல்களில் ஈடுபட்டுள்ளது.

ஆனால் இம்முறை இன்றைய மக்கள் அதிகம் கவனம் செலுத்தும் ஊடக துறையில் செயல்பட திட்டமிட்டு திறவுகோல் மின்னிதழை வெளியிடுகிறோம். இதற்கென பிரபல படைப்பாளர்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. படைப்பாளர்களாக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்களிடம் இருந்து படைப்புகளை பெற்று உள்ளோம்.

மாறாக எங்கள் குழுவில் உள்ளவர்களின் படைப்புகள், மற்றும் மன்னார்குடியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் படைப்புகள் மற்றும் குழு உறுப்பினர்களின் சகோதரிகள், பிள்ளைகளிடம் இருந்தும் படைப்புகள் பெற்றோம்.

எங்களின் வட்டம் சிறியது ஆனால் இதில் இருந்தே இவ்வளவு படைப்புகள் பெற முடிகிறது என்றால், மன்னார்குடி முழுவதும் நாங்கள் படைப்புகள் பெற்றால் எண்ணிலடங்கா படைப்புகள் பெற முடியும் என்று உணர்ந்து இனி வரும் காலங்களில் தொடர்ந்து மின்னிதழ் வரும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.

திறவுகோல் போன்று ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் இது போன்று தொடங்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். காரணம் எங்களை போன்று தமிழகம் முழுவதும் பலர் உள்ளார்கள்.

உள்ளூர் படைப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். thiravukolsubmit@gmail.com

அதே நேரத்தில் படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்:
+91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்
https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App
https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் – +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் வெளியீட்டு விழா

மன்னார்குடியில் உள்ள அனைவரையும் மன்னார்குடியின் முதல் மின்னிதழான திறவுகோல் (மாத இதழ்) வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறோம்.

thiravukol-emagazine-invitation

நம்மாழ்வார் ஏரி – பழைய சுவர்களில் வெள்ளையடிக்கும் பணி

விடுமுறை, ஞாயிறு என வந்துவிட்டால் படிக்கும் மாணவர்கள் என்றால் விளையாட்டு, அலுவலகங்களில் வேலை புரிபவர்கள் என்றால் ஓய்வு அல்லது தொலைக்காட்சி என இருக்கும் சமூகத்தில் மன்னையின் மைந்தர்கள் சமூக அக்கறையுடன் கிடைக்கும் நேரங்கள் அனைத்தையும் செவ்வனே எப்படி பயன்படுத்துவது என்று திட்டமிட்டு இந்த வார இறுதியில் செய்த பணிதான் மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியின் (சீயார் தோப்பு) பகுதியில் இருக்கும் நீர்த்தேக்க தொட்டி பழைய சுவர்கள், மற்றும் அதில் இருக்கும் பாழடைந்த அறையின் சுவர்களில் வெள்ளையடித்து தூய்மையாக்கிய செயல்.

காலை 7 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2.30 மணி வரை களப்பணியாற்றி அங்கு சுற்றியுள்ள மக்கள் பலர் சிந்திக்கும் வண்ணம் செய்து முடித்தனர்.

களப்பணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம். பின்வரும் தோழர்கள் களப்பணியை சிறப்பாக செய்து முடித்தவர்கள்.

குரு, தங்க கலைவாணன், கமல், விக்னேஷ், ஆகாஷ், பிரசன்னா, வினோத், புஸ்பராஜ், பிரவீன், சாய் விஜய், செந்தில் குமரன், செந்தில் பக்கிரி, இலியாஸ், ஜீவானந்தம், கைலாசம் ஐயா, மருத்துவர் பாரதிசெல்வன் ஐயா, தமிழ்மணி அண்ணாவின் அப்பா, ஆகாஷ் அம்மா அப்பா, மோகன், லட்சுமி.

அதன் புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு.

மாணாக்கர்களுக்கு கையேடு, எழுதுகோல் வழங்கிய மன்னையின் மைந்தர்கள் குழு

மன்னையின் மைந்தர்கள் அமைப்பு மூலம் ஏழ்மையான அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு கையேடு (Note), எழுதுகோல் இன்று (18-10-2016) கொடுக்கப்பட்டது.

  • ஊராட்சி ஒன்றிய பள்ளி பூவனூர் 91 நபர்களுக்கும்.
  • அரசினர் உயர்நிலைப்பள்ளி பூவனூர் 116 நபர்களுக்கும்
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலப்பூவனூர் 130 நபர்களுக்கும்
  • பெரம்பூர் உயர்நிலைபள்ளி 81 நபர்களுக்கும்
  • பெரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 40 நபர்களுக்கும்
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ரிஷியூர் 105 நபர்களுக்கும்
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வடகரைவயல் 135 நபர்களுக்கும்
  • அரசு மேல்நிலைப் பள்ளி ராயபுரம் 265 நபர்களுக்கும்
  • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ராயபுரம் 35 நபர்களுக்கும்
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 40 நபர்களுக்கும்

மொத்தம் 1038 நபர்க்கு பென்சில்: 1324 அழிப்பான் 349 எழுதுகோல் 1040. பெரிய நோட்டு 639 சின்ன நோட்டு 384 அளவுகோல் 808 மற்றும் தட்டு 200 குடிநீர் குவளை 200 கொடுக்கப்பட்டது.

நிகழ்வில் பங்குகொண்ட அனைத்து தோழர்களுக்கும், பள்ளி அலுவலர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு ….

 

மன்னையின் மைந்தர்கள் குழுவின் – உலக சுற்றுசூழல் தின செயல்கள்

தேர்தல் முடிந்தது, எங்களின் வேலையும் முடிந்தது என்று இல்லாமல் மீண்டும் கள பணியை தொடங்கிவிட்டனர் மன்னையின் மைந்தர்கள் குழு. இன்று (05/06/2016) உலக சுற்று சூழல் தினம் அதனை முன்னிட்டு மக்களுக்கு இந்த தினத்திற்கான காரணம் புரியும் வண்ணம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு சிறிய அளவில் திட்டமிட்டு சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

முதலாவதாக ஐயா மருத்துவர். பாரதிசெல்வன் அவர்களின் மருத்துவமனையில் நெகிழி பைகளை ஒழிப்பதன் சிறு தொடக்கமாக துணி பைகள் விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்டு பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

மேலும் மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தில் இருக்கும் கருவை மரங்களை முற்றிலும் அகற்றும் வண்ணம் மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்கள் ஜீவா, விக்னேஷ், தங்க கலைவாணன், பிரசன்னா, அஜித், அப்பு மற்றும் அவர்களின் நண்பர்கள் என அனைவரின் உதவியுடன் பெரும்பாலும் அகற்றப்பட்டது.

புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக இங்கு பதிந்துள்ளோம்.

கருத்தரங்கத்திற்கு அன்புடன் அழைக்கிறோம்

2016-election-sagayam-ias-mannargudi-07எளியவர்கள் செய்ய நினைக்கும் எந்த ஒரு செயலும் அவ்வளவு எளிதில் நடப்பது இல்லை.

மக்களை மடையர்கள் ஆக்கி வாக்கு கேட்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், மக்களுக்கு விழிப்புணர்வே சிறந்த மருந்து என புரிந்து ஒரு பெரும் பணியை இம்முறை கையில் எடுத்துள்ளனர் மன்னையின் மைந்தர்கள் குழு.

நாளை (30-04-2016)  மன்னை வாழ் மக்களுக்காக நடத்தப்படும் மாபெரும் தேர்தல் கருத்தரங்கம் என்பதால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை இரவு, பகல் என பாராமல் உழைத்து வருகிறார்கள்.

ஒவ்வொவொரு தெரு, கிராமம் என அழைப்பிதழ்கள், பிரச்சார தகவல்களை மன்னை மற்றும் அதன் சுற்று பகுதியில் வாழும் அனைவருக்கும் நேரில் சென்று கொடுத்து வந்தனர்.

இரவு நேரத்தில் சுமார் 200 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன மன்னார்குடியின் பெரும் பகுதியில் செய்து உள்ளனர். முகநூலிலும்  தொடர்ச்சியான விளம்பர பணிகள் செய்து வருகிறார்கள்.

மன்னையின் மைந்தர்கள் குழு எவ்வளவு விளம்பரங்கள் செய்தாலும், அவர்கள் எதிர்பார்ப்பது தங்களின் மேலான வருகையே அப்பொழுதுதான் கருத்தரங்கம் முழுமை அடையும் என்பது அவர்களின் நம்பிக்கை.

கள பணியாற்றிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்….

கள பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு இங்கே பதிந்துள்ளோம்.

மன்னை வாழ் மக்களுக்காக நடத்தப்படும் மாபெரும் தேர்தல் கருத்தரங்கம்

sagayam-ias-visit-mannargudi-election-2016-1அனைவரும் தேர்தல் பற்றி யோசிக்கும் பொழுது நம் மன்னையின் மைந்தர்கள் குழு தேர்தலுக்கு பிறகு மன்னார்குடி சட்டமன்ற தொகுதி மக்களின் வாழ்வு நிலை எப்படி மேம்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் பல்வேறு நபர்களிடம் கருத்து கேட்டு ஒரு மாபெரும் கருத்தரங்கை நடத்த உள்ளது. இதற்கு தங்களின் வருகையை மட்டுமின்றி தங்கள் நண்பர்கள், குடும்பத்தார்கள் என அனைவரின் வருகையையும் எதிர்நோக்குகிறோம்.

மன்னையின் மைந்தர்கள் – மன்னை வாழ் மக்களுக்காக நடத்தப்படும் மாபெரும் தேர்தல் கருத்தரங்கம் (அனுமதி இலவசம்)

நாள்: ஏப்ரல் 30 (30-04-2016)
நேரம்: மாலை 5 மணிக்கு
தலைப்பு: நமது வாக்கு! நமது உரிமை!!
இடம்: மருதுபாண்டியர் திருமண மண்டபம், காந்தி சாலை, மன்னார்குடி.

வரவேற்புரை:
ராம்.சி (ஒருங்கிணைப்பாளர்)

தலைமையுரை:
ஜீவானந்தம். தி (தலைவர்)

மன்னார்குடி வாக்காளர்களின் கோரிக்கை வாசிப்பு:
அருண் ரவி (செயற்குழு உறுப்பினர்)

கருத்தரங்க நோக்க உரை:
மருத்துவர் இலரா. பாரதிசெல்வன் (தலைமை ஆலோசகர்)

சிறப்புரை:
உயர்திரு: சகாயம் (இந்திய ஆட்சி பணியாளர்)
துணைத் தலைவர் அறிவியல் நகரம் சென்னை, தரமணி)

நன்றியுரை:
விக்னேசு. ரெ (ஒருங்கிணைப்பாளர்)

மற்றும் தங்களின் வருகையை எதிர்நோக்கும் மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்கள்

‎தோழர் கு. முத்துகுமார்‬ ஏழாம் ஆண்டு நினைவு நாள்

‪29-01-2015 அன்று ‎தோழர் கு. முத்துகுமார்‬ ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
நமது அமைப்பின் சார்பாக மன்னார்குடி அருகில் குடிதாங்கிசேரியில் உள்ள மனோலயம் மனநல காப்பகத்தில் உள்ள 20 சகோதரர்களுக்கு நமது அமைப்பின் தலைமை ஆலோசகர் மருத்துவர் ஐயா பாரதிசெல்வன் இலரா அவர்களால் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மருந்துகளும் வழங்கினோம்.

மருத்துவ முகாமில் ‪#அவினேஷ்‬ என்ற 17 வயது சிறுவனுக்கு இருதய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அச்சிறுவனுக்கு நாளைக்கு ஐயாவின் மருத்துவமனையில் மேல்சிகிச்சை அளிக்கவுள்ளார். அங்கு உள்ள 20 சகோதரர்களுக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டு 45 பாய் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு முன்மொழிந்த விக்னேஷ் மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து மன்னையின் மைந்தர்கள் உறுப்பினர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

இயற்கையின் வீழ்வில் இருந்து… மண்ணையும், மன்னையையும் காக்க…

நாள்: டிசம்பர் 5
இடம் : தேசிய மேல்நிலைபள்ளி
மாலை: 5 மணிக்கு

மாபெரும் கருந்தரங்கம்

இயற்கை மீட்பதற்கான கருந்தரங்கம்.
அடாத மழை பெய்தாலும் என்ன பயன்?

மன்னார்குடியில் 100 மேற்பட்ட குளங்களும் வடிகால் வாய்கால்களும் மிக பெரிய நீர் தேக்கங்கள் இருந்தாக வரலாறு மட்டுமே இடம் பெற உள்ளது.

இன்று மழை நீரை சேகரிக்க மன்னார்குடியில் எந்த வசதிகளும் இல்லை.

இதில் இருந்து மாற்றம் காண இயற்கை மீட்க மன்னையின் மைந்தர்களாக

அஞ்சாத தமிழனின் உடன்பிற்ப்பு என்பதை இயற்கை அழிக்கின்ற சக்தியை எதிர்கொள்ளுவோம்.

எங்கள் மண்ணை பறிகொடுக்கும் நிலைவரும் போது மைந்தர்களாக இணைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

வீட்டிற்கு ஒர் வீரர் களம் இறங்குவோம் மன்னையின் மைந்தர்களாக.

தொடர்புக்கு
9751522755 / 7871892677 / 8681835643

mannaiyin-maintharkal-invitation-dec-2015-01mannaiyin-maintharkal-invitation-dec-2015-02