எளியவர்கள் செய்ய நினைக்கும் எந்த ஒரு செயலும் அவ்வளவு எளிதில் நடப்பது இல்லை.
மக்களை மடையர்கள் ஆக்கி வாக்கு கேட்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், மக்களுக்கு விழிப்புணர்வே சிறந்த மருந்து என புரிந்து ஒரு பெரும் பணியை இம்முறை கையில் எடுத்துள்ளனர் மன்னையின் மைந்தர்கள் குழு.
நாளை (30-04-2016) மன்னை வாழ் மக்களுக்காக நடத்தப்படும் மாபெரும் தேர்தல் கருத்தரங்கம் என்பதால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை இரவு, பகல் என பாராமல் உழைத்து வருகிறார்கள்.
ஒவ்வொவொரு தெரு, கிராமம் என அழைப்பிதழ்கள், பிரச்சார தகவல்களை மன்னை மற்றும் அதன் சுற்று பகுதியில் வாழும் அனைவருக்கும் நேரில் சென்று கொடுத்து வந்தனர்.
இரவு நேரத்தில் சுமார் 200 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன மன்னார்குடியின் பெரும் பகுதியில் செய்து உள்ளனர். முகநூலிலும் தொடர்ச்சியான விளம்பர பணிகள் செய்து வருகிறார்கள்.
மன்னையின் மைந்தர்கள் குழு எவ்வளவு விளம்பரங்கள் செய்தாலும், அவர்கள் எதிர்பார்ப்பது தங்களின் மேலான வருகையே அப்பொழுதுதான் கருத்தரங்கம் முழுமை அடையும் என்பது அவர்களின் நம்பிக்கை.
கள பணியாற்றிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்….
கள பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு இங்கே பதிந்துள்ளோம்.



































