கஜா புயல் பாதிப்பும், பங்களிப்பும்

நவம்பர் 16, 2018 ஆம் தேதி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்திற்கு அதிகமாக வீசிய காற்றுடன் கூடிய மழையாமல் அந்த பகுதியில் இருந்த பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் விழுந்தும், ஆடு மாடுகள் இறந்ததாலும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடினர்.

தமிழக அரசு சார்பிலும் போதுமான உதவிகள் மாதங்கள் கடந்து மக்களை சென்று அடையவில்லை.

சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு விட்டது மற்றும் மின்சாரமும் பல இடங்களில் ஒரு வாரம், இரண்டு வாரங்கள் ஆகியும் மக்களுக்கு கிடைக்கவில்லை.

தனி நபர்கள், சிறு சிறு குழுக்கள் என்று பலரும் கைகோர்த்து களத்தில் மக்களுக்கு இரவு பகல் பாராமல் உதவினார்கள். அந்த வகையில் மன்னையின் மைந்தர்கள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் தன்னார்வலர்கள் உதவியுடன் செய்த செயற்பாடுகள் கீழ் உள்ள  காணொலியில் காணவும்.

gajaa-2049-reportமேலும் கஜா புயல் பாதிப்பும் பங்களிப்பும் என்ற ஆவணத்தை இங்கு சொடுக்கி பார்க்கவும். இந்த மின்னூலில் நமது அமைப்பின் செயல்பாடுகளும், கைக்கொடுத்த தன்னார்வலர்கள் மற்றும் வரவு, செலவு கணக்குகளை தனி கோப்பாக பகிர்கிறோம்.

உடன் பயணித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

மன்னையின் மைந்தர்கள்
மண்ணின் மாற்றத்தை நோக்கி
தொடர்புக்கு +91 8220567322