40 ஆண்டுகளுக்கு முன் மன்னார்குடி பகுதிக்கு நீர் வழங்கும் இடமாக இருந்ததுதான் இந்த ஜி. ஆர். தோப்பு – கோபிரளயம் நீர்த்தேக்க பகுதி (மன்னார்குடி அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி பின்புறம்) நாளடைவில் அரசின் பராமரிப்பு இன்றி சில வாரங்களுக்கு முன் வரை சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புடன் காணப்பட்டது.
மன்னையின் மைந்தர்கள் குழு முதற்கட்ட பணியாக அங்கு இருந்த கருவேல மரங்களை அகற்றும் திட்டத்தை முன்வைத்து செலவு, மற்றும் களப்பணியை முன் நிறுத்தினர்.
மன்னையின் மைந்தர்களின் தொடர் முயற்சியால் கடந்தால் 8 நாட்களாக சீமை கருவேல மரங்கள் அங்கு இருந்து அகற்றப்பட்டது. இதற்கு களப்பணியிலும், பணமாகவும், கருத்தளவிலும் உதவிய மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.
சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ.
- G R Thoppu, மன்னார்குடி
- G R Thoppu, மன்னார்குடி










































