இயற்கையை நாம் பாதுக்காத போது இயற்கை நம்மை பாதுகாப்பதில்லை. கடந்த 100 ஆண்டுகளாய் சந்தித்திராத கோர நிகழ்வை சென்னை, கடலூரில் பார்க்க முடிந்தது. வார்த்தைகளை கொண்டு விவரிக்க முடியாத மக்களின் துயரை துடைக்க பலரும் தங்கள் பங்களிப்பை கொடுத்தனர்.
அந்த வகையில் மன்னையின் மைந்தர்கள் குழு மற்றும் பலரின் ஒத்துழைப்புடன் உணவு பொருள், பாய், மருந்து பொருள் என சேகரித்து பாதிப்படைந்த கடலூர் மக்களிடம் இரண்டு கட்டமாக கொண்டு சேர்த்தனர்.
குறிப்பாக மருத்துவர் பாரதிசெல்வன் அவர்கள் மருத்துவ முகாம் நடத்தி மேலும் கள பணியை சிறப்படைய செய்தார்.
உதவி செய்த அனைத்து நல்லுலங்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.









































































































































































